
அதன்படி, ஈழத்தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படையினர் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபடுவர். பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட இந்த சட்டம் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.