கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகளை நவம்பர் 4 ஆம் தேதி நடந்த ஆசியான் ஜப்பான் உச்சி மாநாட்டில் கடுமையாக விமர்சித்தார் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே . மேலும் வடகொரியா ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது.
ஜப்பானின் பிரதமர் ஷின்சே அபேவின் விமர்சனம் குறித்து வடகொரியா , “அபே ஒரு முட்டாள். ஜப்பானில் அணுகுண்டு வீசியது போல நடந்து கொள்கிறார் ” என்று விமர்சித்துள்ளது.